Sunday, 18 February 2018

விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 1 | Vidukathaigal | Riddles


1)மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும். அது என்ன?
2)உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை. அது என்ன?
3)காய்க்கும் பூக்கும் கலகலக்கும்.காகம் இருக்கக் கொப்பில்லை.அது என்ன?
4)கத்தி போல் இலை இருக்கும்.கவரிமான் பூ பூக்கும்.தின்ன பழம் கொடுக்கும்.தின்னாத காய் கொடுக்கும்.அது என்ன?
5)அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள். அவள் யார்?
6)தொப்பொன்று விழுந்தான்  தொப்பி கழன்றான். அவன் யார்?
7)சட்டையைக்  கழற்றினால் சத்துணவு. அது என்ன?
8)உரிச்ச புறா சந்தைக்குப் போகுது. அது என்ன?
9)கன்று நிற்க கயிறு மேயுது. அது என்ன?
10)கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
11)தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
12)கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள்.அவள் யார்?
13)மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம்.அது என்ன?
14)ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?
15)தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான். அவன் யார்?
16)பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
17)தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?
18)இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை.அது என்ன?
19)கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்?
20)உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம்.அது என்ன?
21)மழை காலத்தில் குடை பிடிப்பான்.அவன் யார் ?
22)தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன்.அது என்ன?
23)ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் சுவைக்கும் அது என்ன ?
24)அடிப்பக்கம் மத்தளம், இலை பர்வதம், குலை பெரிது, காய் துவர்ப்பு, பழம் தித்திப்பு. அது என்ன?
25)எங்க வீட்டுத் தோட்டத்திலே தொங்குதே ஏகப்பட்ட பச்சைப் பாம்புகள். அது என்ன?
26)வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை.அது என்ன?
27)முள்ளுக்குள்ளே முத்து குவலயம்.அது என்ன? 
28)அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?
29)காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம்.அது என்ன?
30)சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது.அது என்ன?
31)பெட்டியைத் திறந்தால் கிருஷ்ணன் பிறப்பான்-அது என்ன?
32)பார்த்தால் பசப்புக்காரி, சுவைத்தால் கசப்புக்காரி.அது என்ன?
33)பச்சைக்கிளையில் மஞ்சள் குருவி.அது என்ன?
34)குடுக்கை நிறைய வைரமணி.அது என்ன?
35)அடித்தால் வலிக்கும், குழம்புக்கு ருசியாக இருக்கும். அது என்ன?
36)சட்டை மேல் சட்டையாய், பல சட்டை போட்டவன். சட்டைகளைகழற்றிப் பபார்த்தால், உடம்பை மட்டும் காணோம் – அவன் யார்?
37) பல் துலக்க மாட்டான். ஆனால் இவன் பல் எப்பொழும் வெள்ளை - இவன் யார்?
38)இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா?
39)பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த் தருவதோ சுறுசுறு‌ப்பு.அது என்ன?
40)பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
41)பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன?
42)அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள். அது என்ன?
43)கூரை வீட்டைப் பிரிச்சா……ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன?

மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..

No comments:

Post a Comment

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள் 

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள்     பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு ந...