Thursday, 5 April 2018

விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 2 | Vidukathaigal | Riddles


1)மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி,உரிக்க உரிக்கத் தோலாண்டி. அது என்ன?
2)உச்சிக் கிளையிலே ஒரு முழக் குச்சி ஊசலாடுது. அது என்ன?
3)வண்ணான் வெளுக்காத வெள்ளை, குயவன் பண்ணாத பாண்டம், மழை பெய்யாத தண்ணிர். அது என்ன?
4)மஞ்சள் சட்டை மாப்பிள்ளை மண மணக்கிறார் வீட்டிலே. அது என்ன?
5)பட்டையைப் பட்டையை நீக்கி,பதினாறு பட்டையை நீக்கி, முத்துப் பட்டையை நீக்கி, முன்னே வாராள் சீமாட்டி. அது என்ன?
6)ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி. அது என்ன?
7)பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், கறுப்பு ராஜா. அது என்ன?
8)இரவிலே பிறந்த இளவரசனுக்குத்   தலையிலே குடை. அது என்ன?
9)ஈரப் புடவைக்காரி   இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. அவள் யார்?
10)சூரியன் காணாத கங்கை;சுண்ணம் தோற்கும் வெள்ளை;மண்ணிற் பண்ணாத பாண்டம். அது என்ன?
11)ஒற்றை முத்துக்கு ஒரு பெட்டி, இரட்டை முத்துக்கும் ஒரே பெட்டி - அது என்ன?


மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


No comments:

Post a Comment

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள் 

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள்     பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு ந...