Sunday, 13 May 2018

விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 6 | Vidukathaigal | Riddles

1)உடல் முழுதும் நூறுகட்டு, உச்சி முடிக்கு கட்டே இல்லை - அது என்ன? 2)நீரில் மிதக்கும் பூ, இரவில் பூக்கும், பகலில் உறங்கும் - அது என்ன பூ? 3)குடையுடன் சந்தைக்கு வருபவரை, குழம்புக்காக எல்லோரும் விரும்புவார்கள் - அது என்ன? 4)தாய் சின்னக்கொடி, பிள்ளைகள் பெரியவர்கள் - இது என்ன? 5)உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம், உடலெல்லாம் வரிகள் - அது என்ன? 6)மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன? 7)மூணு கண்ணுப் பானையிலே ஒரு மடக்குத் தண்ணீர் - அது என்ன? 8)குண்டு ராஜாவுக்கு குடல் முழுக்க பல் - அது என்ன? 9)சட்டையை கழற்றினால், சாப்பாடு தயார் - அது என்ன? 10)இளசிலே தாகம் தீர்ப்பான், முற்றினால் சமையலில் ருசிப்பான் - அது என்ன? 11)குங்கும நிறத்தில் பூ பூக்கும், கொள்ளுக்காய் போல் காய்காய்க்கும் - அது என்ன? 12)மணமில்லா பூ, மாதர்கள் சூடாத பூ, மண்டைத் தடி பூ, சமையலில் மணக்கும் பூ - அது என்ன பூ? 13)மண்ணுக்குள் இருக்கும். மங்கைக்கு அழகு தரும். அது என்ன?




மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 5 | Vidukathaigal | Riddles

1)குளத்து நிறைய இருக்கும் தண்ணிர்; குருவி குடிக்க முடியாத தண்ணிர். அது என்ன?
2)அப்பன் சொறியன்; ஆத்தாள் சடைச்சி; அண்ணன் முழியன்; நானோ சக்கரைக்கட்டி. அது என்ன?
3)ஓகோ மரத்திலே, உச்சாணிக் கிளையிலே,ஒட்டுச் சட்டியிலே களிமண் இருக்கிறது. அது என்ன?
4)யானை படுக்க இடமுண்டு; கடுகு மடிக்க இலையில்லை. அது என்ன?
5)அரிசி போல் பூ பூக்கும். அம்மாடி எனச் சொல்லும் காய் காய்க்கும் - அது என்ன?
6)மழையில் பிறந்து வெயிலில் காயுது. அது என்ன?
7)மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?
8)கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?
9)தலையில் வைக்க முடியாத பூ, சமையலுக்கு உதவும் பூ - அது என்ன?
10)பூட்டு இல்லாத பெட்டியை திறக்கலாம், ஆனால் மீண்டும் பூட்ட முடியாது - அது என்ன?
11)உமிபோல் பூ பூக்கும் சிமிழ்போல் காய் காய்க்கும் - அது என்ன?



மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 4 | Vidukathaigal | Riddles

1)ஆத்தாள் தெருவிலே, மகள் கொலுவிலே. அது என்ன? 2)விதை இல்லாமல் விளைவது எது? வெட்டில்லாமல் சாகுமே அது என்ன? 3)அறுசுவை உணவுடன் இலையிலே சோறு. இலையை எறிந்துவிட்டு இலையிலே சாப்பிட அது என்ன? 4)மஞ்சள் குருவி நெஞ்சைப் பிளந்து மகாதேவனுக்குப் பூசை ஆகுது. அது என்ன? 5)அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும். அது என்ன? 6)மஞ்சள் சேலை கட்டி, மங்கையர் பத்துப் பேர்,கயிற்றைப் பிடித்துக் கொண்டு கடையிலே தொங்குகிறார். அவர் யார்? 7)ஊசி போல் இலையிருக்கும்; ருத்ராட்சம் போல் காய்காய்க்கும். அது என்ன? 8)கிண்ணம் போல் பூ பூக்கும்; கிள்ளி முடிக்க முடியாது. அது என்ன? 9)பிறக்கும்போது சுருண்டிருப்பாள்; பிறந்த பின்னர் விரிந்திருப்பாள். அவள் யார்? 10)இந்தப் பிள்ளை பெரியவனானால், படிக்காமலே பலன் தருவான். அவன் யார்? 11)மண்ணுக்குள்ளே பொன்னம்மாள். அவள் யார்?


மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள் 

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள்     பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு ந...