Sunday, 13 May 2018

விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 4 | Vidukathaigal | Riddles

1)ஆத்தாள் தெருவிலே, மகள் கொலுவிலே. அது என்ன? 2)விதை இல்லாமல் விளைவது எது? வெட்டில்லாமல் சாகுமே அது என்ன? 3)அறுசுவை உணவுடன் இலையிலே சோறு. இலையை எறிந்துவிட்டு இலையிலே சாப்பிட அது என்ன? 4)மஞ்சள் குருவி நெஞ்சைப் பிளந்து மகாதேவனுக்குப் பூசை ஆகுது. அது என்ன? 5)அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும். அது என்ன? 6)மஞ்சள் சேலை கட்டி, மங்கையர் பத்துப் பேர்,கயிற்றைப் பிடித்துக் கொண்டு கடையிலே தொங்குகிறார். அவர் யார்? 7)ஊசி போல் இலையிருக்கும்; ருத்ராட்சம் போல் காய்காய்க்கும். அது என்ன? 8)கிண்ணம் போல் பூ பூக்கும்; கிள்ளி முடிக்க முடியாது. அது என்ன? 9)பிறக்கும்போது சுருண்டிருப்பாள்; பிறந்த பின்னர் விரிந்திருப்பாள். அவள் யார்? 10)இந்தப் பிள்ளை பெரியவனானால், படிக்காமலே பலன் தருவான். அவன் யார்? 11)மண்ணுக்குள்ளே பொன்னம்மாள். அவள் யார்?


மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


No comments:

Post a Comment

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள் 

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள்     பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு ந...