Sunday, 13 May 2018

விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 5 | Vidukathaigal | Riddles

1)குளத்து நிறைய இருக்கும் தண்ணிர்; குருவி குடிக்க முடியாத தண்ணிர். அது என்ன?
2)அப்பன் சொறியன்; ஆத்தாள் சடைச்சி; அண்ணன் முழியன்; நானோ சக்கரைக்கட்டி. அது என்ன?
3)ஓகோ மரத்திலே, உச்சாணிக் கிளையிலே,ஒட்டுச் சட்டியிலே களிமண் இருக்கிறது. அது என்ன?
4)யானை படுக்க இடமுண்டு; கடுகு மடிக்க இலையில்லை. அது என்ன?
5)அரிசி போல் பூ பூக்கும். அம்மாடி எனச் சொல்லும் காய் காய்க்கும் - அது என்ன?
6)மழையில் பிறந்து வெயிலில் காயுது. அது என்ன?
7)மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?
8)கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?
9)தலையில் வைக்க முடியாத பூ, சமையலுக்கு உதவும் பூ - அது என்ன?
10)பூட்டு இல்லாத பெட்டியை திறக்கலாம், ஆனால் மீண்டும் பூட்ட முடியாது - அது என்ன?
11)உமிபோல் பூ பூக்கும் சிமிழ்போல் காய் காய்க்கும் - அது என்ன?



மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


No comments:

Post a Comment

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள் 

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள்     பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு ந...