Sunday, 13 May 2018

விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 6 | Vidukathaigal | Riddles

1)உடல் முழுதும் நூறுகட்டு, உச்சி முடிக்கு கட்டே இல்லை - அது என்ன? 2)நீரில் மிதக்கும் பூ, இரவில் பூக்கும், பகலில் உறங்கும் - அது என்ன பூ? 3)குடையுடன் சந்தைக்கு வருபவரை, குழம்புக்காக எல்லோரும் விரும்புவார்கள் - அது என்ன? 4)தாய் சின்னக்கொடி, பிள்ளைகள் பெரியவர்கள் - இது என்ன? 5)உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம், உடலெல்லாம் வரிகள் - அது என்ன? 6)மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன? 7)மூணு கண்ணுப் பானையிலே ஒரு மடக்குத் தண்ணீர் - அது என்ன? 8)குண்டு ராஜாவுக்கு குடல் முழுக்க பல் - அது என்ன? 9)சட்டையை கழற்றினால், சாப்பாடு தயார் - அது என்ன? 10)இளசிலே தாகம் தீர்ப்பான், முற்றினால் சமையலில் ருசிப்பான் - அது என்ன? 11)குங்கும நிறத்தில் பூ பூக்கும், கொள்ளுக்காய் போல் காய்காய்க்கும் - அது என்ன? 12)மணமில்லா பூ, மாதர்கள் சூடாத பூ, மண்டைத் தடி பூ, சமையலில் மணக்கும் பூ - அது என்ன பூ? 13)மண்ணுக்குள் இருக்கும். மங்கைக்கு அழகு தரும். அது என்ன?




மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 5 | Vidukathaigal | Riddles

1)குளத்து நிறைய இருக்கும் தண்ணிர்; குருவி குடிக்க முடியாத தண்ணிர். அது என்ன?
2)அப்பன் சொறியன்; ஆத்தாள் சடைச்சி; அண்ணன் முழியன்; நானோ சக்கரைக்கட்டி. அது என்ன?
3)ஓகோ மரத்திலே, உச்சாணிக் கிளையிலே,ஒட்டுச் சட்டியிலே களிமண் இருக்கிறது. அது என்ன?
4)யானை படுக்க இடமுண்டு; கடுகு மடிக்க இலையில்லை. அது என்ன?
5)அரிசி போல் பூ பூக்கும். அம்மாடி எனச் சொல்லும் காய் காய்க்கும் - அது என்ன?
6)மழையில் பிறந்து வெயிலில் காயுது. அது என்ன?
7)மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?
8)கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?
9)தலையில் வைக்க முடியாத பூ, சமையலுக்கு உதவும் பூ - அது என்ன?
10)பூட்டு இல்லாத பெட்டியை திறக்கலாம், ஆனால் மீண்டும் பூட்ட முடியாது - அது என்ன?
11)உமிபோல் பூ பூக்கும் சிமிழ்போல் காய் காய்க்கும் - அது என்ன?



மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 4 | Vidukathaigal | Riddles

1)ஆத்தாள் தெருவிலே, மகள் கொலுவிலே. அது என்ன? 2)விதை இல்லாமல் விளைவது எது? வெட்டில்லாமல் சாகுமே அது என்ன? 3)அறுசுவை உணவுடன் இலையிலே சோறு. இலையை எறிந்துவிட்டு இலையிலே சாப்பிட அது என்ன? 4)மஞ்சள் குருவி நெஞ்சைப் பிளந்து மகாதேவனுக்குப் பூசை ஆகுது. அது என்ன? 5)அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும். அது என்ன? 6)மஞ்சள் சேலை கட்டி, மங்கையர் பத்துப் பேர்,கயிற்றைப் பிடித்துக் கொண்டு கடையிலே தொங்குகிறார். அவர் யார்? 7)ஊசி போல் இலையிருக்கும்; ருத்ராட்சம் போல் காய்காய்க்கும். அது என்ன? 8)கிண்ணம் போல் பூ பூக்கும்; கிள்ளி முடிக்க முடியாது. அது என்ன? 9)பிறக்கும்போது சுருண்டிருப்பாள்; பிறந்த பின்னர் விரிந்திருப்பாள். அவள் யார்? 10)இந்தப் பிள்ளை பெரியவனானால், படிக்காமலே பலன் தருவான். அவன் யார்? 11)மண்ணுக்குள்ளே பொன்னம்மாள். அவள் யார்?


மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


Thursday, 5 April 2018

விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 3 | Vidukathaigal | Riddles

1)மொட்டை மாடு உட்கார்ந்திருக்குது; மூக்கணாங்கயிறு மேய்ந்து வருது. அது என்ன?
2)சின்னச் சின்னச் சாத்தான்,வயிறு பெருத்துச் செத்தான். அவன் யார்?
3)தட்டுப் போல் இருக்கும் - அதில் சொட்டுத் தண்ணிர் ஒட்டாது. அது என்ன?
4)கழுத்தை வெட்டினால் கண் தெரியும். அது என்ன?
5)பார்க்கப் பச்சை, பழுத்தால் சிவப்பு. பல்லிலே பட்டால் கண்ணிலே நீர். அது என்ன?
6)வெள்ளைக் குதிரைக்குப் பச்சை வால். அது என்ன?
7)மரம் ஏறினால் வழுக்கும்;காய் தின்றால் துவர்க்கும்; பழம் தின்றால் இனிக்கும். அது என்ன?
8)ஒ ஓ அண்ணா, உயர்ந்த அண்ணா, தோளிலே என்ன தொண்ணுறு முடிச்சு. அது என்ன?
9)ஜாடி மேலே குரங்கு. அது என்ன?
10)பெட்டியைத் திறந்தேன் கிருஷ்ணன் பிறந்தான். அவன் யார்?
11)உச்சியிலே குடுமி உண்டு; மனிதனல்ல. உருண்டையான வடிவம் உண்டு; முட்டையல்ல. நீர்ததும்பி நிறைந்திருக்கும்; குளமும் அல்ல. நெற்றியிலே கண் இருக்கும்; சிவனும் அல்ல. அது என்ன?
12)ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே பச்சைப் பாம்பு தொங்குது. அது என்ன?


மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 2 | Vidukathaigal | Riddles


1)மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி,உரிக்க உரிக்கத் தோலாண்டி. அது என்ன?
2)உச்சிக் கிளையிலே ஒரு முழக் குச்சி ஊசலாடுது. அது என்ன?
3)வண்ணான் வெளுக்காத வெள்ளை, குயவன் பண்ணாத பாண்டம், மழை பெய்யாத தண்ணிர். அது என்ன?
4)மஞ்சள் சட்டை மாப்பிள்ளை மண மணக்கிறார் வீட்டிலே. அது என்ன?
5)பட்டையைப் பட்டையை நீக்கி,பதினாறு பட்டையை நீக்கி, முத்துப் பட்டையை நீக்கி, முன்னே வாராள் சீமாட்டி. அது என்ன?
6)ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி. அது என்ன?
7)பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், கறுப்பு ராஜா. அது என்ன?
8)இரவிலே பிறந்த இளவரசனுக்குத்   தலையிலே குடை. அது என்ன?
9)ஈரப் புடவைக்காரி   இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. அவள் யார்?
10)சூரியன் காணாத கங்கை;சுண்ணம் தோற்கும் வெள்ளை;மண்ணிற் பண்ணாத பாண்டம். அது என்ன?
11)ஒற்றை முத்துக்கு ஒரு பெட்டி, இரட்டை முத்துக்கும் ஒரே பெட்டி - அது என்ன?


மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


கிழங்கு வகைகள் (படங்களுடன்)


அறுசுவை உணவுகளும் அதன் நன்மை மற்றும் தீமைகளும் | Six Taste


Saturday, 10 March 2018

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள்

இன்றைக்கு, நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன’ என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு. 
ஹீமோகுளோபின் என்பது நம் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம்.உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
நம் உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் பொறுப்பு இந்த புரதத்துடையதாகும். நுரையீரலில் இருந்து உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் முக்கிய செயலை இது செய்கிறது. இதனால் வாழும் அணுக்கள் சரியான முறையில் செயல்படக் கூடும். அணுக்களில் இருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துச் சென்று, மீண்டும் அதனை நுரையீரலில் கொண்டு சேர்க்க ஹீமோகுளோபின் உதவும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்திட ஹீமோகுளோபின் மிக முக்கிய பங்கை வகிப்பதால், இரத்தத்தில் அதனை இயல்பான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
இயல்பான அளவு, கீழ்வருமாறு:
* வயது வந்த ஆண்களுக்கு 14 - 18 மி.கி./டெ.லி.
* வயது வந்த பெண்களுக்கு 12 - 16 மி.கி./டெ.லி.
ஹீமோகுளோபின் அளவு குறையும் போது சோர்வு, வலுக்குறைவு, மூச்சடைப்பு, மயக்கம், தலை வலி, வெளிரிய சருமம், உடையக்கூடிய நகங்கள், வேகமான இதயத் துடிப்பு மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்தால், அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம்.
பெண்களுக்கு
கர்ப்ப காலத்திலேயோ அல்லது மாதவிடாய் காலத்திலேயோ பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது இயல்பான ஒன்றே. இருப்பினும், அதற்கு பின்னால் வேறு பல காரணங்களும் இருக்கலாம். அதில் மிக முக்கிய காரணங்களாக கருதப்படுவது இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் பி12 குறைபாடுகள் தான்.
ஹீமோகுளோபின் அளவை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் இந்த வீடியோவில் உள்ளது.




Sunday, 18 February 2018

கொசுக்களை விரட்டும் செடிகள் | Mosquito repellent plants | இயற்கை கொசு விரட்டி


மரங்களின் பெயர்கள் பகுதி 1 (படங்களுடன்) | Tree names with images Part 1


99 பூக்களின் பெயர்கள் (படங்களுடன்) பகுதி 2 | 99 Flower names with images Part 2


99 பூக்களின் பெயர்கள் (படங்களுடன்) பகுதி 1 | 99 Flower names with images Part 1


விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 1 | Vidukathaigal | Riddles


1)மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும். அது என்ன?
2)உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை. அது என்ன?
3)காய்க்கும் பூக்கும் கலகலக்கும்.காகம் இருக்கக் கொப்பில்லை.அது என்ன?
4)கத்தி போல் இலை இருக்கும்.கவரிமான் பூ பூக்கும்.தின்ன பழம் கொடுக்கும்.தின்னாத காய் கொடுக்கும்.அது என்ன?
5)அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள். அவள் யார்?
6)தொப்பொன்று விழுந்தான்  தொப்பி கழன்றான். அவன் யார்?
7)சட்டையைக்  கழற்றினால் சத்துணவு. அது என்ன?
8)உரிச்ச புறா சந்தைக்குப் போகுது. அது என்ன?
9)கன்று நிற்க கயிறு மேயுது. அது என்ன?
10)கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
11)தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
12)கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள்.அவள் யார்?
13)மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம்.அது என்ன?
14)ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?
15)தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான். அவன் யார்?
16)பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
17)தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?
18)இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை.அது என்ன?
19)கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்?
20)உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம்.அது என்ன?
21)மழை காலத்தில் குடை பிடிப்பான்.அவன் யார் ?
22)தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன்.அது என்ன?
23)ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் சுவைக்கும் அது என்ன ?
24)அடிப்பக்கம் மத்தளம், இலை பர்வதம், குலை பெரிது, காய் துவர்ப்பு, பழம் தித்திப்பு. அது என்ன?
25)எங்க வீட்டுத் தோட்டத்திலே தொங்குதே ஏகப்பட்ட பச்சைப் பாம்புகள். அது என்ன?
26)வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை.அது என்ன?
27)முள்ளுக்குள்ளே முத்து குவலயம்.அது என்ன? 
28)அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?
29)காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம்.அது என்ன?
30)சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது.அது என்ன?
31)பெட்டியைத் திறந்தால் கிருஷ்ணன் பிறப்பான்-அது என்ன?
32)பார்த்தால் பசப்புக்காரி, சுவைத்தால் கசப்புக்காரி.அது என்ன?
33)பச்சைக்கிளையில் மஞ்சள் குருவி.அது என்ன?
34)குடுக்கை நிறைய வைரமணி.அது என்ன?
35)அடித்தால் வலிக்கும், குழம்புக்கு ருசியாக இருக்கும். அது என்ன?
36)சட்டை மேல் சட்டையாய், பல சட்டை போட்டவன். சட்டைகளைகழற்றிப் பபார்த்தால், உடம்பை மட்டும் காணோம் – அவன் யார்?
37) பல் துலக்க மாட்டான். ஆனால் இவன் பல் எப்பொழும் வெள்ளை - இவன் யார்?
38)இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா?
39)பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த் தருவதோ சுறுசுறு‌ப்பு.அது என்ன?
40)பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
41)பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன?
42)அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள். அது என்ன?
43)கூரை வீட்டைப் பிரிச்சா……ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன?

மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..

ஞாபக சக்தியை அதிகரிக்க...!!! | To improve memory power


Top Vitamin A Fruits and Vegetables


விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள் 

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள்     பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு ந...